• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

நான் படிச்ச பள்ளியிலே ....

Thursday, April 15, 2010 16 comments

எழுப்போசை ஒலித்ததுமே
எழுந்துவிட்டேன் உறக்கம் கலைத்து!

பள்ளிப்படிப்பு முடிந்து
பத்தாண்டு ஆனபின்னும்
எட்டிக்கூட பார்த்ததில்லை
நான் படித்த பள்ளியினை!

வெள்ளிவிழாக்கொண்டாட்டம்,
வரவேண்டி அழைப்பிதழ்!
வேகமாய் புறப்பட்டேன்
விழாவினை சிறப்பிக்க!

வாசலருகே வந்ததும்,
செவிகளில் ரீங்காரமிட்ட
சேரனின் பாடல்கள்!

"அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..."
"ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே....."

மைக்செட் முருகனது
மகனாகப்பிறந்தவன் நான்!

மகன்படிக்க வேண்டுமென,
மெட்ரிக்குலேசன் பள்ளியிலே
அனுப்பிவைத்து
அழகுபார்த்தார்!

பகல்பொழுதில் பள்ளியிலும்
ஓடியாடி இரவுகளில்
ஒலிப்பெருக்கி கட்டுவதும்
வாடிக்கையாய்ப்போனகாலம்!

பாரங்களை அதிகரித்த,
பத்தாம் வகுப்பு வந்தேன்!

அரையாண்டுத்தேர்வு நேரம்!
சட்டமன்றத்தேர்தல் நேரம்!
ஒலிப்பெருக்கி தேவையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் வந்தநேரம்!

கடுமையாய் உழைத்திருந்தும்
குறைந்திருந்த மதிப்பெண்கள்!

நானொருவன் பெயிலானால்,
தேர்ச்சி விகிதம் குறைந்திடுமாம்!

"இனி நீங்கள் படிக்க வேண்டாம்"
இருபது பேர் துரத்தப்பட்டோம்!

.................

அருகிலே வந்தொருவர்,
அதிகாரத்தொனியிலே,
"மந்திரி வர நேரமாச்சி
மைக்செட்டைப்போடு தம்பி"

நினைவுகளை
நிறுத்திவைத்து,
மைக்செட்டை போட்டுவிட்டு,
மந்திரியின் பேச்சைக்கேட்க
மதிலருகே நின்றிருந்தேன்!

அனல்பறந்த
அமைச்சர் பேச்சு!

"நூறு சதம் தேர்ச்சிபெற
செய்யவேண்டியது என்னவென்று
சொல்லித்தாருங்கள் எங்களுக்கும்!
செயல்படுத்த துடிக்கின்றோம்,
மாநகராட்சி பள்ளியிலும்!"

உண்மைகள் புதைத்து
பொய்யாய் சிரித்தது
சுவரொட்டியின்
வண்ணவாசகம்!

"ருத்தைந்து ண்டுளா 100% தேர்ச்சி"



ஒரு நாள் தமிழன்

Friday, April 9, 2010 15 comments

அலுவலக நாளொன்றில்
உணவருந்தும் வேளையிலே
உள்ளூர்க்கதை முதலாய் 
உலகக்கதை வரையில்
அலசினோம் ஆராய்ந்தோம்!

தாய்மொழியில் பேசுவது,
தலைப்பாய் வந்ததின்று!

வெறும்பேச்சாய் துவங்கியது,
பெரும்சவாலாய் மாறியது!

பிறமொழியின் கலப்பின்றி
நாள்முழுக்க பேசுவதே ,
எங்களுக்குள்
எழுந்த சவால்!


நண்பர்கள் நால்வருமாய்,
நாள்குறித்தோம் நாளையென!

எப்படியும் வெல்லவேண்டும்,
எல்லோரின் எண்ணவோட்டம்!

விடியல் வந்தவேளையிலே,
விழிதிறந்து பார்க்கையிலே,
அம்மாவின் குரலோசை,
"காப்பி வேணுமா? டீ வேணுமா?"

"கா.." என்றிழுத்து,
'காப்பி' என்பது தமிழ்ச்சொல்லா?
குழப்பம்வந்து ஆட்கொள்ள,
"பால்" என்றே கேட்டுவைத்தேன்!

அம்மாவின் விழிகளில்
ஆச்சர்யப்பார்வை!

வேகமாய் கிளம்பிவிட்டு,
வெளியே வந்து பார்க்கையிலே,
இருசக்கர வாகனத்தில்,
ஒருசக்கரத்தில் காற்றில்லை!
காற்றடித்தும் பயனில்லை!

பஞ்சராக இருக்குமோ!
பதைபதைத்தது நெஞ்சம்!

நடைபோட்டேன் வெளியே!
நடையில் நின்ற அப்பாவின் கேள்வி,
"வண்டியிலே போகலையா?"
விடையில்லை என்னிடத்தில்!

பஞ்சரென்று சொல்லிநானும்,
போட்டியிலே தோற்காமல்,
ஏதேதோ கையசைத்து,
எப்படியோ தலையசைத்தேன்!

அருகிலோர் சாலையிலே,
ஆட்டோவிற்கு காத்திருந்தேன்!

ஆட்டோவின் வருகைகண்டு,
"ஆ.." வென வாய்திறந்து.....
ஆட்டோவும் தமிழில்லை!
அதற்குநிகர் தமிழ்வார்த்தை,
அதுவுமெனக்கு நினைவில்லை!


கடந்து சென்ற ஆட்டோவை,
கைதட்டி வரவழைத்தேன்!

அலுவலகம் உள்நுழைந்தால்,
அருகாமை தோழி வந்து,
"குட் மார்னிங்" எனச்சொன்னாள்!
"காலை வணக்கம்" பதில் சொன்னேன்!

ஏற இறங்க பார்த்துவிட்டு
எட்டிநின்றாள் அதன்பிறகு!

உணவருந்தும் வேளையிலே,
நால்வருமாய் வந்தமர்ந்தோம்!

ஆங்கிலச்சொல் வந்துவிட்டால்,
ஐயோ நாம் தோற்றிடுவோம்!

என்ன பேச?
எதனைப்பேச?
எல்லோர்க்கும் குழப்பந்தான்!

வாய் திறந்து மூடினோம்,
உணவருந்த மட்டுமின்று!

முப்பது நிமிட நேரமாய்,
மௌனம் தவிர வேறொன்றில்,
மொழியாய் பேச இயலவில்லை!

தமிழில் பேச முடியாமல்,
தடுமாறித்தான் போனோமே!

போட்டியிலே வென்றதுயார்?
பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum