• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

காசும் கல்வியும்...

Wednesday, April 27, 2011 3 comments





இன்றைய பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்படித்தான் இருக்கிறது. இங்கே குறிப்பிட்டிருக்கிற பள்ளியில் வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள். மற்றபள்ளிகளில் சொல்லவில்லை என்பதைத்தவிர வேறெந்த வேறுபாடுகளும் இல்லை.
 
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த மக்களின் கல்வியின் மூலம் தீர்மானிப்பதே எளிதானதும் நிரந்தரமானதுமாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எவற்றையெல்லாம் நாம் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அங்கெல்லாம் கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது.

நம்முடைய நாடுகளில் என்ன நிலை?
1 . காசுள்ளவனுக்கே தரமான(?) பள்ளிக்கல்வி
2 . காசுள்ளவனுக்கே உயர்கல்வி
3 . காசுள்ளவனுக்கே பொறியியல், தொழிற்நுட்பம், மேலாண்வியல், மருத்துவம் போன்றவை
4 . ஒன்றாம் வகுப்பு செல்லும் ஒவ்வொரு 100 மாணவர்களில் வெறும் 6 முதல் 10 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது

இப்பள்ளிகள் எல்லாம் என்ன செய்கிறது?
1 . அரசாங்கம் எவ்வளவு வசூலிக்கவேண்டுமென்று சொல்கிறதோ அதைவிட மிக மிக அதிகமாகவே வசூலிப்பது,
2 . வசூலிப்பது ஒரு தொகையும், பில்லில் வேறு ஒரு தொகையும் இருப்பது,
3 . பாதியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கிறவர்களை எந்த தயவுதாட்சண்யமுமின்றி பள்ளியைவிட்டே வெளியே அனுப்புவது,

இவ்வாறு வியாபாரம் என்பதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்கள் இவர்கள்...
'காசுதான் முக்கியம், அதற்காக என்ன செய்தாலும் தவறில்லை' என்பதைத்தான் இந்த தனியார் பள்ளிகள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருகின்றன.

பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.
 
இவ்வருத்தங்களையும் கோபங்களையும் விவாதங்களையும் செயல்வடிவமாக்கி மிக வலிமையாக எதிர்க்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது...



'செங்கடல்' திரைப்படம் குறித்து...

Friday, April 22, 2011 0 comments


"அதோ ஈரானைப்பாருங்கள், ஜாபர் பனாகியை கைது செய்திருக்கிறார்கள். இதோ சீனாவை பாருங்கள்... அங்கே பாகிஸ்தானை பாருங்கள், மாற்று சினிமாவிற்கு வாய்ப்பே இல்லை......... ஆனால் இந்தியாவில் மட்டும்தான் எந்த தடையும் இல்லை. " என்றெல்லாம் போகிற போக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம்மை முதிர்ச்சியடையாத முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகிற அரதப்பழசு மொக்கை மசாலாப்படங்களுக்குதான் இந்த தடையெல்லாம் கிடையாது. நிகழ்கால அரசியலை/அரசை விமர்சிக்கிற எந்த ஒரு படைப்பையும் அனுமதிக்காது நம்மை ஆள்கிற கூட்டம். அதிலும், மைக் பிடித்து இந்த அரசை விமர்சிப்பதையும், எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு புத்தகங்களாக விமர்சனங்களை கொட்டித்தீர்ப்பதையும் சிலநேரம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் விடுவார்கள், ஆனால் காட்சி ஊடகம் வழியே மட்டும் நிச்சயம் விடமாட்டார்கள். ஏனெனில் திரைப்படங்கள் எந்த அளவிற்கு நம் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதும், இல்லாத ஒன்றை மக்களின் பொதுபுத்தியில் ஏற்றவும், இருக்கிற ஒன்றை பொதுபுத்தியிலிருந்து வெட்டியெறியவும் திரைப்படங்களால் முடியும் என்கிற எண்ணமிருக்கிறது அவர்களுக்கு.

நடுநிசிநாய்களைக்கூட குறைக்க அனுமதிப்பார்கள், ஆனால் செங்கடலை கொந்தளிக்க அனுமதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்....

இவற்றையெல்லாம் மீறி, எம்மக்களின் சமகால வாழ்க்கையினை-அவலத்தினை உலகறியச்செய்ய, சமரசமின்றி நமக்கு வாய்த்த கலையின் மீதேறி உரக்கச்சொல்ல முற்படுவதில்தான் நம் வெற்றி இருக்கிறது...

'செங்கடல்' பேசும் அரசியலில் நமக்கு முரண்கருத்து இருக்கலாம். அதனை விமர்சனம் செய்யும் உரிமையும் நமக்கிருக்கிறது. ஆனால் அந்த படைப்பையே வெளிவரவிடாமல் தடுக்கிற நிலையினை எதிர்த்து நிற்கவேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருப்பதாகவே உணர்கிறேன்...




மடியேந்தி...

Tuesday, April 19, 2011 0 comments


கொள்கையென்று எதுவுமில்லை!
கொள்ளையடிப்பதிலும் ஒற்றுமையில்லை!
அறைக்கதவை தாழிட்டுக்கொண்டு
அடித்துக்கொள்ளவும் திறமையில்லை!
காங்கிரசார் நாங்களென்று,
மக்களின் முன்நின்று,
மடியேந்தி ஓட்டுக்கேட்க
முடிந்ததெப்படி இவர்களாலே???



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum