மரணதண்டனை அமலில் இருக்கும் நாடுகளைவிடவும், மரணதண்டனையை நீக்கிவிட்ட நாடுகளில்தான் குற்றங்களும் கொலைகளும் குறைவாக நடைபெறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன... தண்டனைகளை கடுமையாக்குவதாலெல்லாம் குற்றங்களை குறைத்துவிடமுடியாது.... பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் என்று பட்டியலை தயாரித்து வைத்துக்கொண்டு சகமனிதர்களைக் கொல்லத்துடிக்கும் மரணதண்டனைச்சட்டத்தை இல்லாமல் செய்துவிட மிக வலிமையாகக் குரல்கொடுப்பதற்கான சரியான தருணம் இதுவே... |
தாராளமான, எல்லைகளற்ற தனியார்மயம் நமக்களித்திருக்கிற கார்ப்போரேட்கள் அரசாளும் வழிமுறையில், ஊழல் என்பது அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது. அதனை சரிசெய்யாமல், 'ஊழல்' 'ஊழல்' என்று கத்துவதாலேயோ, சட்டமொன்று கொண்டுவந்தால் சரியாகிவிடும் எல்லாம் என்று சத்தம்போடுவதாலேயோ ஊழலை ஒழித்துவிடமுடியாது |
அமெரிக்காவில், AT&T நிறுவனமும் T-Mobile நிறுவனமும் இணைந்தால்தான் 97 % அமெரிக்க மக்களை சென்றடைய முடியும் என்று ஒரு பொய்யைச்சொல்லி இணைதல்வேலையைத்துவங்கினார்கள்.... ஆனால் அப்படியெல்லாம் 97 % மக்களை சென்றடைகிற விரிவாக்கத்திட்டமெல்லாம் எதுவுமே இல்லை என்று அந்நிறுவன வக்கீல்களால் எழுதப்பட்ட இரகசியக்கோப்பு வெளியாகியிருக்கிறது... இந்த இணைதலின் மூலம், 20000 தொழிலாளர்களை வீட்டுக்கனுப்புவதுதான் அவர்களது நோக்கம்... |
நேற்று காலையில், சில மின்னஞ்சல் முகவரிகளும் கையெழுத்துகளும் நிரப்பப்பட்ட தாளொன்றினை நீட்டினான் இளைஞனொருவன். மெல்லிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு, "இதுல கையெழுத்து போடுங்க... நம்ம பிரதமருக்கு அனுப்புவோம்... ஊழலை ஒழித்து புரட்சியை உண்டாக்குவோம்" என்றான் ஊழலின் மூலவேர்களை பிடுங்காமல் ஊழலை ஒழிக்கமுடியுமுடியாதென அறியாதவனாக.... அவனது ஆர்வத்தை தடுக்க மனமின்றி, இல்லாத மின்னஞ்சலையும் அறியாத கையெழுத்தையும் போட்டுக்கொடுத்தேன்... புரட்சியென்பது இத்தனை எளிதாக இருக்குமென முன்பே தெரிந்திருந்தால்...... |
உலகின் மற்ற ஏழை நாடுகளை சுரண்டிச்சுரண்டியே கொழுத்துப்போன அமெரிக்க முதலாளித்துவமே இவ்வளவு எளிதாக வீழ்கிறதென்றால், சொந்த நாட்டு மக்களைச்சுரண்டியே கொழுத்துக்கொண்டிருக்கிற இந்திய முதலாளித்துவம் வீழ்ந்து அதளபாதாளத்திற்கு செல்லும் நாள் வெகுதொலைவிலில்லை என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை... அதே நேரத்தில், தானாக வீழ்கிற முதலாளித்துவம், நிச்சயமாக வேறு வேறு வடிவத்தில் மீண்டு வந்து மீண்டும் சுரண்டவே முயற்சிக்கும் என்பதையும் சுரண்டப்படுகிறவர்கள் உணரவேண்டிய நேரமிது... |
தற்செயலாக பார்த்த ஒரு தொலைக்காட்சித்தொடரில் (கனா காணும் காலங்கள்), பொறியியல் கல்லூரியில் மாணவர்களில் ஒருவன் பேசிய வசனம்: "இந்தியாவுக்கு காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கித்தந்தது இஞ்சினியரிங் காலேஜிகளுக்கும் சேத்துதானடா.... ஆனா நம்மள மட்டும் இன்னும் அடிமைகளை நடத்துற மாதிரியே நடத்துரானுங்க காலேஜில...." |
தெய்வத்திருமகள் திரைப்படத்தின் பாடலொன்றில் வரும் வரிகள்.... விக்ரம் : "கதை சொல்லப்போறேன்.. கதை சொல்லப்போறேன்...." விக்ரமின் நண்பர் : "கதையா???? சொல்லாத.... சொல்லாத... யாராவது திருடி படமா எடுத்துரப்போறாங்க....." சுயவிமர்சன வரிகளா இவை??? |
வார்த்தைகள்கூட புலப்படாத வயதவளுக்கு! வரைபடமாக மட்டுமே அறிந்த எழுத்துக்களை 'வா'வென துணைக்கழைத்து, வாழ்த்துமடலொன்றை கிறுக்கித்தீட்டி பிஞ்சுகைகளால் கைகுலுக்கிநீட்டியபோது, வயதுகூடியது எனக்கல்ல, அவளுக்கென்று புரிந்துகொண்டேன்... |

